புதுடெல்லி: சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக டெல்லியில் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வியாழக்கிழமையன்று டெல்லி ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய 18 வயதை எட்டாத சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள், கடந்த சனிக்கிழமை 25 வயது ஆசாமி ஒருவர், தொடர் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடமான டெல்லி ஷாகீன்பாக் பகுதியில், இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் கேட் எண் 5ல், அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பின்னர் ஸ்கூட்டியில் அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அதிருஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 4 நாளில் 3வது முறையாக டெல்லியில் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: தேர்தல் பணியிலிருந்து போலீஸ் அதிகாரி நீக்கம்
- நள்ளிரவு துப்பாக்கி சூடு
- தில்லி
- காவல்துறை அதிகாரி
- சிஏஜி
- சிஏஏ
- டெல்லியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நள்ளிரவு துப்பாக்கிச் சூடு