குன்னூரில் நாய்கள் கண்காட்சி

குன்னூர்:  குன்னூரில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. நீலகிரி கெனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி குன்னூர் தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. முன்னதாக போலீசில் குற்றங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மேலும் உள்நாட்டு வகையான ராஜபாளையம், கோம்பை, காரவன்ஹவுண்ட்,  ராம்பூர்ஹவுண்ட், வெளிநாட்டு வகையான டாபர்மேன், பீகிள், இங்கிலீஷ்பாய்ன்ட்டர், கோல்டன்ரீட்ரைவர், பீகிள்ஸ், பிரேசிலியன், மஸ்தீப் உள்பட 250 வகைக்கும் மேற்பட்ட நாய்கள்  இக்கண்காட்சியில் கலந்து கொண்டன.

இதில் கட்டளைகளுக்கு கீழ்படிதல், மோப்ப திறன் நாய்களின் ரகம், ஓடும்திறன், நாய்களின் வயது, எடை, உயரம் உள்ளிட்ட திறமைகள் பரிசோதிக்கப்பட்டன. சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர், வெளிமாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: