புதுடெல்லி : மேக்சிஸ் வழக்கை டெல்லி நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க தொடங்கி இருப்பதால், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவையின் அனுமதி பெறாமல் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது. டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது.