மகாராஷ்டிரா மாநில கிராமத்தில் காதலர்களை கொடூரமாக அடித்து நொறுக்கிய கும்பல் : சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

ஜால்னா: மகாராஷ்டிராவில் உள்ள கிராத்தில் காதல் ஜோடியை 4 பேர் கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், ஜால்னா மாவட்டத்தில் உள்ள கோண்டேகாவ் என்ற கிராமத்தில் காதல் ஜோடி தனிமையில் பேசிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு இழுத்துச் சென்று முதலில் காதலனை சரமாரியாக தாக்கியது. சட்டையை கிழித்து அடித்து உதைத்தது. இதை தடுக்க முயன்ற காதலியை கும்பல் ஆபாசமாக பேசி  மானபங்கம் செய்தது. இதைப் பார்த்து, ‘காதலியை எதுவும் செய்ய வேண்டாம்,’ என்று காதலன் கதறினார். அந்த இளம்பெண்ணும் ‘அண்ணா என்னை விட்டு விடுங்கள்’ என்று கெஞ்சினார். அப்போது, அந்த கும்பலில் ஒருவன் அவர்களை பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததுடன், தனது கூட்டாளியை பார்த்து, அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்யுமாறு கூறினான்.

இந்த காட்சியை அந்த கும்பலே வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட அந்த வீடியோ வைரலானது. இந்த வீடியோ பற்றி முதல்வர் உத்தவ் தாக்கரேயின் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றனர். அவருடைய உத்தரவை தொடர்ந்து, போலீசார் அதிரடி விசாரணை நடத்தி காதல் ஜோடியை தாக்கிய கும்பலை கைது செய்தனர். இது பற்றி  போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘இந்த தாக்குதல் கடந்த வியாழக்கிழமை  நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடக்கிறது,’’ என்றார்.

Related Stories: