புதுடெல்லி: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், “பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறப்பித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை” எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தமிழக அரசு மனுத்தாக்கல்
- பொல்லாச்சி பாலியல் குற்றவாளிகள் சட்டம் பொல்லாச்சி பாலியல் குற்றவாளிகள் திரும்பப்பெறுதல் சட்டம்
- உச்ச நீதிமன்றம்
- மேல்முறையீட்டு நீதிமன்றம்