திருவனந்தபுரம்: கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் சென்குமார். கடந்த 2016ல் பினராயி விஜயன் தலைமையிலான இடதுமுன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது அவர் மாற்றப்பட்டு லோக்நாத் பெக்ரா புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்குமாருக்கு மீண்டும் டிஜிபி பதவி வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு மீண்டும் டிஜிபி பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2017ல் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.