சென்னை: எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம், உழவன் பவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார். அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் தனியார் கல்லூரியில் நடிகர் சிவக்குமார் பேசியுள்ளார்.