தேர்தல் பணியின்போது குடிபோதையில் இருந்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

சேலம்: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், கடந்த 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதனையொட்டி, சேலம் இரும்பாலை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வரும் எஸ்எஸ்ஐ பழனிசாமி, விநாயகம்பட்டி அரசு பள்ளியில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அன்றைய தினம், மாநகர கூடுதல் துணை கமிஷனர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பழனிசாமி, குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு பரிந்துரைத்தார். தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்திய கமிஷனர், குடிபோதையில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ பழனிசாமியை, சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: