லக்னோ: சிஏஏ பற்றி விவாதிக்க தயாரா என்ற அமித்ஷாவின் சவாலை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஏற்பதாக அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பொதுவெளியில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க தயாரா என சவால் விடுத்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அரசின் சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.