ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள கெரோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சிறப்பு போலீஸ் அதிகாரி சபாஷ் அகமது, ராணுவ வீரர் ஒருவர் என 2 பேர் பலியாகினர். இந்நிலையில், நேற்று 2வது நாளாக இருதரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.