புதுடெல்லி: பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுக்க ‘விசாகா’ குழு வழிகாட்டுதல்படி புதிய சட்டம் கொண்டு வர அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு, அதன் பரிந்துரைக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது. ெதாடர்ந்து பொதுமக்களிடம் கருத்து கேட்க அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த அக்டோபர் 2018ல் பல பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக பணியிடத்தில் (மீடூ) எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும், பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டத்தை கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 2019 ஜூலையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் உறுப்பினர்களாக பல்வேறு சட்ட அமைப்புகளின் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.