மும்பை: நடிகை ஷபானா ஆஸ்மியும் அவரது கணவரும் கவிஞருமான ஜாவேத் அக்தரும் நேற்று மும்பையில் இருந்து காரில் புனேக்கு சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே விரைவு சாலையில், ராய்கட் மாவட்டத்தில் உள்ள காலாப்பூர் அருகே மாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கார் முன்னால் சென்ற ஒரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. லாரியின் பின்பக்கமும் சேதமடைந்தது.