பல்லாவரம்: மாங்காடு அடுத்த கோவூர், அனு கார்டனை சேர்ந்தவர் யுவராஜ் (28). பெயின்டர். முறையாக பைனான்ஸ் கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலையும் செய்து வந்தார். இவர், கடந்த 13ம் தேதி இரவு அதேபகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, கடைசியாக யுவராஜ் செல்போனுக்கு பேசிய அவரது நண்பர் அப்பு (எ) தாமோதரன் (23) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து யுவராஜை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின்படி, அதே பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் (எ) ஜெகன்(23), முத்து (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.