சென்னை: முதல்வர் தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் தொடர்பான ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் 15 தொழில் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக் குழுவின் 2வது கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில், ரூ. 8,120 கோடி முதலீடுகளில், 16,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், 21 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.முதல்வர் தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் தொடர்பான ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்ட குழுவின் 2வது கூட்டம்: 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி
- சந்தித்தல்
- முதல் அமைச்சர்
- பொறுப்பின்
- உயர் மட்டக் குழு
- முதலீட்டு வழிகாட்டுதல்களுக்கான உயர் மட்ட குழு