டெல்லி: அகதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை முகநூலில் பதிவிட்டதாக எழுந்த குற்றச் சாட்டுகள் தொடர்பாக அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அதிகாரி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதி மன்ற கண்காணிப்பின் கீழ் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஹிதேஷ் தேவ் சர்மா என்பவரை நீக்க கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டனர். இந்த வழக்குகளை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிதேஷ் தனது முகநூல் பக்கத்தில் அகதிகள் குறித்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தவறான பதிவுகளை பதிவிட்டிருப்பதாக வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.