ஸ்ரீகாளஹஸ்தி: தெலங்கானா அருகே வாகனம் மோதி படுகாயமடைந்த தாய் குரங்கு தனது வலியையும் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட சொட்ட குட்டிக்கு பால் கொடுத்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சிடைய செய்தது. தெலங்கானா மாநிலம், நர்சாபூரிலிருந்து ஐதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் கும்முடிதல கிராமம் அருகே காடுகள் நிறைந்த பகுதி உள்ளது. இதனால் காட்டு பகுதியிலிருந்து வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
அதேபோல் உணவை தேடி குரங்கு ஒன்று சாலையை கடந்தது.