குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்களித்துள்ளனர்: அன்வர்ராஜா

சென்னை: குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்களித்துள்ளனர் என்று அன்வர்ராஜா கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது. தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு சொல்லும் என நம்புகிறேன். சிறுபான்மையியனர் அச்சப்படுவதால் அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் எனவும் நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: