கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேட்டை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் அமுல்ராஜ், விஜயன் ஆகியோர் நேற்று முன்தினம் படவேடு அடுத்த வேட்டைகிரி பாளையம் கிராமத்தில் வரலாறு சார்ந்த அடையாளங்களை கள ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 14ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, அமல்ராஜ் கூறுகையில், ‘படவேடு பகுதி கிபி 13ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 15ம் நூற்றாண்டு வரை சம்புவராயர் மன்னர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் கீழ் இருந்து வந்தது.இந்த காலகட்டத்தில் போரில் உயிரிழந்தவர்களுக்கும், கழுமரத்தில் ஏற்றி கொல்லப்பட்ட வீரர்களுக்கும் பல நடுகற்கள் இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.