மும்பை: நாட்டுக்கு எதிராக போர் செய்ய தூண்டியதாக பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனருமான பர்ஹான் அக்தருக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள சைதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பர்ஹான் அக்தர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், இனியும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் ஒன்று திரண்டு போராடுவோம் (கடந்த 19ம் தேதி நடந்த போராட்டம்) என்று கூறியிருந்தார்.அவரது இந்த கருத்தும், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததும் தேசத்துரோகம் என்றும் நாட்டுக்கு எதிராக பர்ஹான் அக்தர் போர் தொடுத்திருப்பதாகவும் மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.