திருமலை: ஐதராபாத்தை சேர்ந்தவர் மகாதேவம்மா. இவரது மகள் கலாவதியம்மா. இவர்கள் 2 பேரும், எஸ்.ஆர்.நகர் குற்றப்பிரிவு புலனாய்வு போலீசில் கடந்த வாரம் புகார் செய்தனர். அதில் பூஜை செய்து குறைகளை தீர்ப்பதாக கூறி சாமியார் ஒருவர் தங்களிடம் 2.70 லட்சத்தை ஏமாற்றியதாக தெரிவித்தனர். விசாரணையில், ஆந்திராவின் கொல்லமிட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ்சிங் என்பவர்தான் அந்த சாமியார் என்று தெரியவந்தது. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் ஆன்மிக சொற்பொழிவு மையம் அமைத்து சொற்பொழிவாற்றி வந்தார். அங்கு வரும் பெண்களை குறி வைத்தும், அவர்களின் பல்வேறு குறைகளை நீக்குவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதில், ‘குழந்தை இல்லாதவர்கள், பொருளாதார நெருக்கடி உள்ளவர்கள், குடும்பத்தில் அமைதி இல்லாதவர்கள் தன்னை தொடர்பு கொண்டால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக’ தெரிவித்துள்ளார்.