நாக்பூர்: டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதல் ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்துக்கு நிகரானது என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று பேட்டியளித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, கூறியதாவது; நமது சமூகத்தில் திட்டமிட்டே பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள். ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு ஜாலியான்வாலா பாக் படுகொலை சம்பவத்துக்கு நிகரானது. இதுபோன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் ஒரு அச்சத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.