டெல்லி: மோடி தலைமையிலான அரசு ஆறே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் பாஜக அரசை கண்டித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், பொருளாதார வளர்ச்சி குறைவதை தடுக்க மத்திய அமைச்சர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என தெரிவித்தார்.