புதுடெல்லி: சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கேட்டு பிந்து, பாத்திமா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போதைய சூழலில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.