திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்த உத்திராபதி அவருடைய மனைவி சங்கீதா, மகள் அபிநயலட்சுமி மற்றும் சிறுவன் ஆகாஷ். இவர்கள் நால்வரும் கடந்த 11ம் தேதி திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லக்கூடிய குருவாயூர் எஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளனர். பிற்பகல் 3மணியளவில் கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்பு சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு சுமார் 1மணியளவில் இவர்கள் நால்வரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. பின்பு அவ்வழியே சென்ற சிலர் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதற்கட்டட விசாரணையில் ஈடுபட்டனர்.
