சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், துறைத்தேர்வுகள் மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு வரும் 22ம்தேதி முதல் 30ம்தேதி வரை நடைபெற இருந்த துறைத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5ம்தேதி முதல் 12ம்தேதி வரை நடைபெறும்.