புதுடெல்லி: நித்யானந்தாவின் பெண் சீடர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில் அவர்கள் அமெரிக்காவில் இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு சொந்தமான குஜராத்தின் அகமதாபாத் ஆசிரமத்தில் பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் ஜனார்த்தனின் 2 மகள்களையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதற்கிடையே, தலைமறைவான நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. ஈக்வெடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயர் சூட்டி அதை தனிநாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை ஈக்வெடார் அரசு மறுத்தது. இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயமான 2 பெண்கள் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் இருப்பதாக நித்தியானந்தாவின் சிஷ்யைகள் தகவல்: அகமதாபாத் ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம்
- நித்யானந்தா
- ஐக்கிய மாநிலங்கள்
- அகமதாபாத் சுற்றுச்சூழல் நீதிமன்றம்
- அகமதாபாத் உயர் நீதிமன்றம்
- nittiyananta