டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் சிவசேனா வாக்களித்ததால் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலி ஆரம்பமாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்த நிலையில் காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு எதிராகவே அல்லது வாக்களிப்பதை தவிர்க்கவோ சிவசேனாவுடன் காங்கிரஸ் கூறியுள்ளது. கூறியதற்கு மாறாக மக்களவையில் பாஜகவுக்கு ஆதரவாக 17 சிவசேனா எம்பிக்கள் வாக்களித்தால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.