புதுடெல்லி: ``வெங்காயம், பெட்ரோல் விலை கிடுகிடு என உயர்ந்து வரும் நிலையில் பாஜ அரசு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது’’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வெங்காயம், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சமையலில் வெங்காயத்தை பார்ப்பதே அரிதாகி விட்டது. இந்த நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த தவறி விட்டதாக மத்தியில் ஆளும் பாஜ அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.