பார்ஹி: ‘‘பாஜ ஆட்சிக்கு வந்தால் தான் நிலையான ஆட்சியை தரமுடியும் என மக்கள் நம்புகிறார்கள்’’ என ஜார்கண்ட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பெரும்பாலான தொகுதிகளை பாஜ கைப்பற்றியுள்ளதன் மூலம் அங்கு எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கவிழாமல் தப்பியது. வாக்கு எண்ணிக்கை முடிவு பற்றி அறிந்த பிரதமர் மோடி நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசை குற்றம்சாட்டினார். மூன்றாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில் பர்ஹி பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது;