புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் அதுதொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க மறுத்து வருகிறார். அவரது வீட்டிற்கு சென்று எங்களால் அதனை எடுத்து வரமுடியாது.