புதுடெல்லி: சிஆர்பிஎப் வீரர்களை விலங்குகளைபோல் நடத்தியதாக ஜார்க்கண்ட் அரசை சிஆர்பிஎப் தலைமை குற்றம்சாட்டியுள்ளது. ஜார்கண்டில் 5 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 222வது பட்டாலியனை சேர்ந்த உதவி கமாண்டர் அந்தஸ்திலான அதிகாரி ``தங்களை விலங்குகளைபோல் நடத்தினர் என குற்றம்சாட்டி மாநில நிர்வாகம் மற்றும் டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 7ம் தேதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்ற எங்களது குழுவை சேர்ந்த 100 பேருக்கு உள்ளூர் அதிகாரிகள் உதவி செய்யவில்லை.