மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தன்னை அணுகியபோது பாஜ.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தனது திட்டம் பற்றி சரத் பவாருக்கு தெரியும் என்று கூறியதாக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருடன் சேர்ந்து பாஜ அமைத்த அரசு மூன்று நாட்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது. அதன் பிறகு முதல்வர் பதவியை தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்து விட்டார். அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கு திரும்பினார்.