ஹைதராபாத்: ஹைதராபாத் என்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி பதிவு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அடுத்த சட்டான்பள்ளியில் கால்நடை மருத்துவர் டிஷா லாரி ஓட்டுநர் மற்றும் கிளினர்கள் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் அதன பின் டிஷா உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முதல் குற்றவாளி முகமது ஆரிப் உட்பட நான்கு பேரையும் கைது செய்த தெலுங்கானா போலீசார், விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.