நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரில் பிரபல சினிமா இயக்குநர் கைது

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் அளித்த புகாரின் அடிப்படையில், பிரபல சினிமா இயக்குநர் ஸ்ரீகுமார்மேனன் கைது செய்யப்பட்டார். மலையாள  சினிமாவில் முன்னணி நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் அசுரன் என்ற படம்  மூலம் அறிமுகம் ஆனார். நடிகர் திலீப்பை திருமணம் செய்த பின்னர் மஞ்சுவாரியர்  சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றனர்.

அதன்பின் மீண்டும் நடிக்க  வந்த அவர் பிரபல விளம்பர இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய ஒரு நகை கடை  விளம்பரத்தில்  நடித்தார்.

இந்நிலையில், இரு மாதங்களுக்கு  முன் மஞ்சு வாரியர் கேரள டிஜிபி கேலாக்நாத் பெக்ராவிடம்  அளித்த புகாரில், ‘ ஸ்ரீகுமார் மேனன் என்னிடம் இருந்து வாங்கி வைத்துள்ள கையெழுத்திட்ட   காசோலைகள், ஆவணங்களை முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறினார். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை அவரிடம், போலீசார்  விசாரித்தனர். அதில், மஞ்சுவாரியரின் புகார் உண்மை என தெரிந்தது. இதையடுத்து, ஸ்ரீகுமார் மேனனை போலீசார் கைது செய்தனர். பிறகு்், அவரை 2  நபர் ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories: