நாக்பூர்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், தன் மீதான கிரிமினல் வழக்கு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, ஜன.4ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்நவிஸ் மீது, 1996 மற்றும் 1998ல், ஏமாற்றுதல் மற்றும் மோசடி பிரிவு களில், இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை, பட்ந விஸ், நாக்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக, வழக்கறிஞர் சதிஷ் உகே, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. இதைத் தொடர்ந்து, சதிஷ் உகே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு அடிப்படை ஆதாரமிருப்பதாக கூறி, வழக்கை விசாரிக்குமாறு, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.