டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் 96 மூத்த அதிகாரிகள் உள்ளிட்டு, ஊழலில் சிக்கிய 220க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முன்கூட்டியே கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது; ஜூலை 2014 முதல் 2019 அக்டோபர் வரை 5 ஆண்டுகளில் வெவ்வேறு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் குரூப் ஏ அதிகாரிகள் 96 பேர் மற்றும் 126 குரூப் பி அதிகாரிகள் பேர் ஆக மொத்தம் 222 பேர் ஊழலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.