சென்னை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் துணை நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் தனபால். இவர் அமாவாசையையொட்டி கடந்த 26ம் தேதி தமிழகத்தில் இருந்து வந்த 7 பேர் உட்பட 9 பேர் கொண்ட கும்பலுடன் சிவன் கோயில் அருகில் உள்ள காலபைரவர் கோயில் வளாகத்தில் நள்ளிரவு அமானுஷ்ய பூஜை நடத்தியுள்ளார். இதை வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூஜை நடத்திய துணை நிர்வாக அதிகாரி தனபால், சென்னையை சேர்ந்த வெங்கடேஷ், பிரகாஷ், சிவகுமார், நந்தகுமார், எம்.வெங்கடேஷ், ராமன், பிரபு, ரமேஷ்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து, புதையல் எடுப்பதற்காக பூஜை நடந்ததா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அருகே நள்ளிரவு அமாவாசை பூஜை நடத்திய சென்னை கும்பல் கைது: புதையல் எடுக்க நடந்ததா என விசாரணை
- சென்னை
- கும்பல்
- சந்திரன் பூஜை
- புதையல் வேட்டை
- ஸ்ரீகலஹஸ்தி சிவன் கோயில்: விசாரணை
- ஸ்ரீகலஹஸ்தி சிவன் கோயில் நள்ளிரவு