சூரத்: கடையை உடைத்து கொள்ளையடிக்க வரும் திருடர்கள் பணத்தை குறிவைத்த காலம் போய், வெங்காய மூட்டைகளை தூக்கிச் செல்லும் காலம் வந்து விட்டது. குஜராத்தின் சூரத் நகர பலன்பூர் படியா என்ற பகுதியில் அமித் கோன்ஜியா என்ற வியாபாரி காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது, 5 வெங்காய மூட்டைகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மூட்டைகளில் தலா 50 கிலோ என 250 கிலோ வெங்காயம் இருந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.25,000. இது குறித்து அமித் கூறுகையில், ‘‘கடையில் வெங்காய மூட்டைகளை மட்டும் திருடி சென்றுள்ளனர். பணம் திருடு போகவில்லை. என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு திருட்டு நடந்ததில்லை’’ என்றார்.