மதுரை: திருகார்த்திகை நாளான டிச.10ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்படும் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத உற்சவம் டிச.4ம் தேதி தொடங்கி டிச.13ம் வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. கார்த்திகையை முன்னிட்டு 10 நாட்கள் பஞ்ச மூர்த்திகள் காலை, மாலை வேளைகளில் ஆடி வீதியில் புறப்பட்டு வலம் வருவர். திருக்கார்த்திகை நாளான டிச.10ம் தேதி, கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும்.