தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி 2 பேர் படுகாயம்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காரப்பட்டை சேர்ந்தவர் சிவகுமார்(42), தனியார் ஷு நிறுவன ஊழியர். இவரது நண்பர்கள் மணிகண்டன்(35), கோதண்டன்(41). இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் காரப்பட்டு வந்தனர். மதியம் மூவரும் அதே பகுதியில் உள்ள மலைபகுதிக்கு சென்று மது அருந்தி உள்ளனர்.

பின்னர், அங்கு இருந்த தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்க முயன்றனர். இதில் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக பறந்து வந்து மூவரையும் கொட்டின. இதில் காயமடைநத மூவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். வீடு திரும்பிய சிவகுமாருக்கு நள்ளிரவில் உடல் நலக்கோளாறு ஏற்பட்டதில் உயிரிழந்தார். இதுகுறித்து உம்ராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: