இதுகுறித்து ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன் புகாரின் பேரில் கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். முன்னாள் திவான் மகேந்திரன் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள 10க்கும் மேற்பட்ட பெரிய கோயில்கள் உள்ளிட்ட 45 கோயில் நகைகள் பற்றி ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள கருவூலம் மற்றும் கோயில் கருவூலங்களில் ராமநாதபுரம் சமஸ்தான சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார், அறங்காவலர் அபர்ணா நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் கடந்த 5 நாட்களாக ஆய்வு செய்தனர்.
ஆவணங்களின்படி தங்க நகைகள் சரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பாரம்பரிய வெள்ளி நகைகள், முத்து, பவளம் உள்ளிட்ட இதர ஆபரணங்கள், விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி மற்றும் பரளச்சியில் உள்ள சிவன் கோயில்கள் உள்ளிட்ட இதர கோயில்களில் தொடர்ந்து நகை சரிபார்ப்பு செய்யப்படும் என சமஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.1 கோடி தங்க நகைகள் மாயம் எதிரொலி ராமநாதபுரம் சமஸ்தானத்தில் 45 கோயில் நகைகள் சரிபார்ப்பு appeared first on Dinakaran.