சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு விருப்பமனு விநியோகம் மாவட்ட அலுவலகங்களில் நேற்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதேபோல், அமமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் நேற்று முதல் தொடங்கியது. அமமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் தங்களின் விருப்ப மனுக்களை காலை 10 மணி முதல் அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அலுவலகங்களில் பெற்றுகொண்டு உரிய கட்டணத்தை செலுத்தி பூர்த்தி செய்து அளித்தனர்.