கவுகாத்தி ஐஐடி.யில் பரபரப்பு தூக்கில் தொங்கிய ஜப்பான் மாணவர்: கொலையா? தற்கொலையா?

கவுகாத்தி: அசாமில் உள்ள ஐஐடி.யில் ஜப்பானை சேர்ந்த மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அசாம் மாநிலம், கவுகாத்தியில் ஐஐடி கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. ஜப்பானின் கிபூ பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர் கோடா ஒனோடா. 3 மாத பயிற்சிக்காக கவுகாத்தி ஐஐடி,க்கு வந்தார்.  இவரது பயிற்சி வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஐஐடி.யின் லோஹத் விடுதியில் உள்ள தனது அறையின் கழிவறை ஜன்னலில் கோடா தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர் இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கோடாவின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது, கொலையா? அல்லது தற்கொலையா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: