கவுகாத்தி: அசாமில் உள்ள ஐஐடி.யில் ஜப்பானை சேர்ந்த மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலம், கவுகாத்தியில் ஐஐடி கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. ஜப்பானின் கிபூ பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர் கோடா ஒனோடா. 3 மாத பயிற்சிக்காக கவுகாத்தி ஐஐடி,க்கு வந்தார். இவரது பயிற்சி வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஐஐடி.யின் லோஹத் விடுதியில் உள்ள தனது அறையின் கழிவறை ஜன்னலில் கோடா தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.