ஜெய்ப்பூர்: ‘‘அயோத்தியில் பிரமாண்டமான கோயில் கட்ட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது,’’ என ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில் சச்சின் பைலட் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எல்லோரும் வரவேற்கின்றனர். அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்ட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. உச்ச நீதிமன்றத்தின் முடிவை நாம் மகிழ்ச்சியாக மதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்வதை எல்லாரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.