சென்னை: வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. அந்த காற்று சுழற்சி தற்போது தமிழக கடலோரத்தை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளதால், கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.