சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகர பேருந்துகள் நிற்கவில்லை என்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் : போக்குவரத்துத் துறை

சென்னை : சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149என்கிற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்தது போக்குவரத்துத் துறை. நிற்காமல் செல்லும் பேருந்தின் பதிவு எண், பேருந்து நிறுத்தத்தின் விவரங்களை புகார் அளிக்கும்போது கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகர பேருந்துகள் நிற்கவில்லை என்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் : போக்குவரத்துத் துறை appeared first on Dinakaran.

Related Stories: