விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல் பணிக்குழு ரூ.40 லட்சம் சுருட்டல்: பரபரப்பு போஸ்டர்கள்

திருமங்கலம்: விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜ தேர்தல் பணிக்குழுவினர், பூத் ஏஜெண்டுகளுக்கு வழங்கிய ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக, அக்கட்சியினரே திருமங்கலம் பகுதியில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக மதுரை மேற்கு மாவட்ட பாஜ தலைவர் சசிக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி, விருதுநகர் தொகுதி அமைப்பாளர் வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர் சின்னஇருளப்பன் ஆகிய 4 பேர் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தலைமையில் பாஜவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மதுரை அருகே உள்ள திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜ தேர்தல் பணிக்குழுவுக்கு எதிராக, அக்கட்சியினரே போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், பாஜ சார்பில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூ.40 லட்சம் வரை சுருட்டிய சசிக்குமார், சின்னசாமி, வெற்றிவேல், சின்னஇருளப்பன் ஆகியோர் மீது பாஜக மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல் பணிக்குழு ரூ.40 லட்சம் சுருட்டல்: பரபரப்பு போஸ்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: