இந்த பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்வுநிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி, உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உள்ளாட்சி தணிக்கை செய்ய வந்தபோது அங்கு நடைபெறும் முறைகேடுகளை மறைக்கும் விதமாக லஞ்சம் பெற இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், செயல் அலுவலர் சீனிவாசனுக்கு சொந்தமான வடலூரில் உள்ள வீட்டிலும், கடலூர் ஆனைகுப்பத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலியின் வீட்டிலும், திருவந்திபுரத்தில் உள்ள உள்ளாட்சி தணிக்கை குழுவின் ஆய்வாளர் விஜயலட்சுமி வீட்டிலும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை 7 மணி முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து எவரையும் வெளியே அனுப்ப வில்லை. மேலும், வெளியில் இருந்தும் உள்ளே வர யாரையும் அனுமதிக்காமல் சோதனை நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த சோதனை கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பேரூராட்சியில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்; செயல்அலுவலர் உள்பட 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி ரெய்டு appeared first on Dinakaran.