திருவனந்தபுரம்: கேரள கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டம் மூலம் ஏராளமான வயதானவர்களும் பயின்று வருகின்றனர் இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பறக்குளம் பகுதியை சேர்ந்த பாகீரதியம்மா என்ற 105 வயதான மூதாட்டிக்கும் கல்வி கற்க ஆசை ஏற்பட்டது. இவர் ஒன்பது வயதாக இருக்கும்போது குடும்ப சூழ்நிலை காரணமாக மூன்றாவது வகுப்பில் படிப்பை ைகவிட்டார். தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை.இந்நிலையில் இவர் படிக்க விரும்புவதை அறிந்த கொல்லம் மாவட்ட எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார், பாகீரதியம்மாவுக்கு கல்வி கற்க தேவையான ஏற்பாடுகளை செய்தார்.