புதுடெல்லி: கருப்பு பணத்தை கட்சிக்குள் கொண்டுவரவே ரிசர்வ் வங்கியின் விதியையும் மீறி பாரதிய ஜனதா அரசு தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் பத்திரம் வெளியிட்டது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நன்கொடையை 2000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக பெறும் திட்டத்தால் வெளிநாட்டு பணம் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போதைய அரசு மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது, என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டாகும். 2018ல் பத்திரங்கள் விற்பனை மற்றும் நன்கொடை பெறப்பட்டதில் 95% பாரதிய ஜனதாவுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.